Saturday, April 4, 2015

கூச்சம் ஏன்?

எங்கள் அலுவலகத்தின் அருகே உள்ள நான்கு சாலைச் சந்திப்பு பகுதியில் ஒரு சைவ உணவகம் உள்ளது. விலை கொஞ்சம் அதிகம் என்றாலும் சுவை, சுகாதாரம், தரம்  ஆகியவற்றை ஒப்பிடுகையில் அது பெரிதாகத் தெரிவதில்லை. எப்போதாவது இரவு அங்கு சாப்பிடச் செல்வோம்.
கடையினுள் நுழையும் போது, காசாளர் இருக்கையைத் தாண்டியவுடன் ஒரு பெரியவர், நெற்றியில் சந்தனப் பொட்டு, குங்குமத்துடன் நின்று கொண்டு வருபவர்களை இருகரம் கூப்பி, வாய்நிறையச் சிரிப்புடன், வாங்க ! வாங்க ! என வரவேற்பார்.
பின்னர் அவரே, வருபவர்களை காலியாக  உள்ள இருக்கைகளுக்கு அழைத்துச் சென்று அமர வைப்பார்.
ஆனால், உணவகத்திற்கு வரும் பெரும்பாலானோர் அவர் இருகரம் கூப்பி வரவேற்கும் போது, சற்றுக் கூச்சத்துடனேயே, தங்கள் கையை பாதி கூப்பியும், கூப்பாமலும்,  தலையை மட்டும் அசைத்தும், ஒரு புன்முறுவல் கூட செய்யாமலும் செல்வர்.
நமது பாரம்பரிய வழக்கப்படி கைப்பி முகமன் கூற கூச்சம் ஏன்?

No comments:

Post a Comment